அன்றே எழுதியது !
தோகைமயில்
ஆடும் மேகம் நதி ஆல்வளரும் காடுகளில்
ஆசையுடன் தானவளை நோக்குகின்றேன்
ஆயதமிழோசைவர பாடுவதில் ஆசைவர
ஆனவரை நானவளைப் பாடுகின்றேன்
கோடுகளி லேறியதில் குலவுபனிச் சாரலிலே
குமரிதனைக் கொஞ்சி விளையாடுகின்றேன்
கூவுகுயில் கிள்ளைமயில் குக்குவெனும் வெண்புறாவின்
கூட்டமதில் எனைமறந் தோடுகின்றேன்
ஓடுகின்ற தேருடைய திருநெல்லை நகரில் வளர்
ஒரு மகளே திரு மகளென்று அறிந்தாடு ஆசைமயிலே!
தூயமனக் காதலுடன் துடிக்கும் நெஞ்சின் தாபங்களை
தூது சென்று செப்பிடுவாய் தோகைமயிலே!!
**********************
வேங்கடத்தான் நாயகி
ஏங்கிடத்தான் வைத்து விட்டாய் எத்தனையோ நெடுங்காலம்
வேங்கடத்தான் நாயகியே வேண்டும்வரம் தருபவளே
பொங்கிடுதே எந்தன்மனம் பொன்மகளின் வரவுகேட்டு
வீங்கிடுதே விம்மிடுதே வெடிக்குமோர் எல்லைவரை
வாங்கிடுவேன் வாயமுதம் வட்டியுடன் முதலுஞ்சேர்த்து
தாங்கிடுவேன் தண்முகத்தை தவறாமல் தடமார்பில்
பாங்குடனே வாழ்துகிறேன் பாலனிவன் பால்மதில்
நீங்காமல் நிந்தரமாய் நெடுங்காலம் வாழ்பவளே !!
No comments:
Post a Comment