சித்திரச் செல்வி
கண்ணிலும் நீயே கண்மலர்க் காணாக் கனவிலி னிக்கும் கருப்பொருள் நீயே விண்ணிலும் நியே விண்வெளி நிறைந்த வியன்மிகு வாழ்வின் விளக்கும் நீயே தனிமையை நீக்க இனிமையாய் வருவாய் தளிர்முகம் காட்டி புளகிதம் தருவாய் மனமெனும் பொழிலில் எழிலுரு பெருவாய் மந்தமா ருதமாய் வந்தெனைத் தொடுவாய் அருகினி லமர்ந்து கண்ணிமைக் காமல் அதிசயப் பொருள்போல் என்னையே பார்ப்பாய் உரிமையாய் நெருங்கி உன்னுயிர் மூச்சும் உணர்ச்சியும் என்மேல் ஊர்வலம் விடுவாய் புத்தக மெடுத்தால் அத்தனை எழுத்திலும் புகுந்துநீ மாயப் புன்னகை புரிவாய் நித்திரை நேரம் முத்தமிழ் சுவைபோல் நெஞ்சினில் புதிய பஞ்சணை விரிப்பாய் சித்திரச் செல்வி சிறுநடை பயிலும் சிந்தூரச் சிமிழே சந்தனச் சுடரே ! பத்தரை மாற்றுப் பசும் பொற்கிழியே ! பால்மணங் கமழும் பவளவாய்க் கிளியே !!
- இளங்கண்ணன்.
இங்கே கிளிக்குங்கள்
கண்டுகளியுங்கள் வர்ணஜாலத்தை.
http://inoyan.narod.ru/kaleidoskop.swf
No comments:
Post a Comment